மறைந்த நடிகர் மனோ பாலா குறித்து பிரபல நடிகையான சுஹாசினி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் மனோ பாலா:
தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது கெரியரை தொடங்கி, அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் போனவர் தான் நடிகர் மனோ பாலா. கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்த இவர் அண்மையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் பிரபல நடிகையான சுஹாசினி மனோ பாலாவை குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் மனோ பாலா உலக நாயகன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கொஞ்சம் காலம் இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
ஏன் மனோ பாலா இருக்கும் இடத்திற்கு கூட கமல் போகமாட்டார். ஒரு தடவை மனோ பாலா என்னிடம் ஓப்பனாகவே கேட்டு விட்டார். அதாவது உன் சித்தப்பா எல்லோரிடமும் நன்றாக பேசுகிறார் பழகுகிறார். ஆனால் என்னிடம் மட்டும் ஏன் பேசாமல் இருக்கிறார் என்று அழுதடி கேட்டதாக நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். மனோ இறந்த பிறகு அவரின் இறுதி சடங்கிற்கு கமல்ஹாசன் வராதது குறிப்பிடத்தக்கது.