தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சோனியா அகர்வால், தன் முதல் கணவரின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பது குறித்து, முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சோனியா அகர்வால் பேச்சு:
தமிழ் சினிமாவில், முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சோனியா அகர்வால். இவர் நடிப்பில் வெளிவந்த கோவில், திருட்டுப் பயலே, உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு, நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வெளியான 7ஜி ரெயின்போ காலனி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இந்த படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த படத்திற்கு பின் இயக்குனர் செல்வராகவனை மணந்து கொண்ட சோனியா அகர்வால், தற்போது அவரைப் பிரிந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், இந்த படம் குறித்து பேசிய சோனியா, இதுக்காக ரொம்ப நாள் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஜொனிட்டா காந்தியுடன் இணையும் விராட் கோலி.., வெளியான சுட சுட அப்டேட்!!
இதை வைத்து பார்க்கும் போது, விவாகரத்துக்கு பின், சோனியா அகர்வால் இந்த படத்துக்காக தன் முதல் கணவருடன் இணைந்து நடிக்க தயாராகி விட்டாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னதான் படத்துக்காக என்றாலும், பிரிந்த ஒருவருடன் மீண்டும் இணைந்து வேலை பார்க்க எப்படி சம்மதிச்சீங்க என, கேள்விகளால் குடைந்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சோனியா அகர்வாலின் இந்த திடீர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.