மறுமணம் செய்து கொள்ளப் போவது குறித்து, இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவி சோனியா அகர்வால் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
திடீர் கருத்து :
தமிழ் சினிமாவில், இயக்குனர் செல்வராகவனால் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால். இந்த படங்களைத் தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, மதுர, சதுரங்கம், திருட்டுப் பயலே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் பிறகு, செல்வராகவனை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான 4 ஆண்டுகளில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதன் பிறகு, தற்போது வரை சோனியா அகர்வால் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மறுமணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி வாழ போகிறேன் என்று தெரியவில்லை.
வனிதா வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த அசீம்.., இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!
ஆனால் எனக்கான நபரை சந்தித்த பிறகு நிச்சயம் திருமணம் செய்வேன். ஆனால், அந்த நபரை இப்போது வரை சந்திக்கவில்லை. எனவே இதற்கு காலம் தான் பதில் சொல்லணும் என தெளிவாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இவர் மறுமணத்துக்கு தயாராகி விட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.