அங்காடி தெரு உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தவர் சிந்து. தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் ‘அஜித் அனைவர்க்கும் மறைமுகமாக உதவி செய்வார் என்பதெல்லாம் சுத்த பொய்’ என்று கூறி தல ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தல அஜித்:
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தமிழ்நாட்டில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே இந்த அளவிற்கு உயர்ந்தவர் தல அஜித். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த நிலையில் இடையில் அவருக்கு படவாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனால் அவரது விடா முயற்சியால் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது இவரின் ‘வலிமை’ திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
எப்பொழுதோ முடிய இருந்த படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஜித் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இவர் மறைமுகமாக பல உதவிகளை இயலாதவர்களுக்கு செய்து வருகிறார் என்று பலரும் கூறிவந்தனர். இப்படி இருக்க தற்போது அதெல்லாம் சுத்த பொய் என பிரபல நடிகை ஒருவர் பேட்டியில் பகிரங்கமாக கூறியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்காடி தெரு படத்தில் சிறு வேடத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து. இவர் தமிழில் நான் மகான் அல்ல, அங்காடி தெரு, பரதேசி உள்ளிட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
மேலும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் ரேணி குண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு அஜித் உதவி செய்தார் என்பதெல்லாம் சுத்த பொய் என்று கூறியுள்ளார். மேலும் தான் பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இதனால் சூரி மற்றும் விஜய் சேதுபதியிடம் வாட்ஸ்ஆப் மூலம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் அஜித் உதவி செய்தார் என்று கூறுவதெல்லாம் சுத்த பொய் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் கோவமாகி உள்ளனர்.