கோலிவுட்டில் சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருத்திகா. இவர் சூர்யாவுக்கு ஸ்ரீ படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து இருந்தாலும் அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிய ரீச்சை கொடுக்கவில்லை. அதன் பிறகு சினிமாவுக்கு பிரேக் எடுத்த அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதில் டைட்டிலையும் அடித்து சென்றார். இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் முதல் இரவு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் எனது எங்களுடைய ஃபர்ஸ்ட் நைட் எப்படி நடந்தது என்றால்,எங்களுக்கு இடையே பில்லோ இருந்தது. காரணம் திருமணத்திற்கு முன்பு என் கணவருக்கு யாரோ அண்ணாச்சி பழத்தை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டதால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது என்று ஸ்ருத்திகா கூறியுள்ளார்.