தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் மீரா மிதுன் தூண்டுதல் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு சம்மு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
போலீசில் புகார்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா மற்றும் அவர்களின் மனைவி குறித்து ஆபாசமான வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார் மீரா மிதுன். தமிழில் ஓரிரு படங்களில் நடித்துள்ள அவர் தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறி வருகிறார். சமீப காலமாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விவேக் உள்ளிட்டோரும் தேவையற்ற கருத்துகளை மீரா மிதுன் கூறி வருவதாகவும், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறினர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் நடிகை ஷாலு சம்மு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுன் மீது புகார் அளித்துள்ளார். அதில் மீரா மிதுன் தூண்டுதலால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை தவறாக சித்தரிப்பதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியுள்ளார்.
எனது மனைவிக்கு இவர் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் – நடிகர் பாலாஜி போலீசில் புகார்!!
மாடலிங்கில் மீரா மிதுனை விலக்கியதற்கு நான் தான் காரணம் என கூறி பழிவாங்க துடிக்கிறார். மீரா மிதுனிடம் பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஒரே கோலிவுட் மாஃபியா அவர் தான். தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள தேவையற்ற கருத்துகளை கூறி வரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.