விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று டி.ஆர்.பி. வரிசையில் முன்னிலை பெற்று வரும் தொடர் ஆகும். இந்த சீரியலில் “முல்லை” கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சீரியலில் முல்லை கதாப்பாத்திரம் மக்களிடத்தில் பிரபலமானது. முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட்ட காரணத்தினால் இனி இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவது யார்? என்று பல வதந்திகளும் பரவி வருகின்றன.
முல்லை வேடம்:
சித்ரா இறப்பதற்கு முன்பாக நடித்து கொடுத்த சீன்கள் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே உள்ள நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேறு நடிகையை தேர்ந்து எடுக்க வேண்டிய நெருக்கடி சீரியல் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் டீவி பிரபலங்களின் பெயர்கள் இந்த கதாபாத்திரத்திற்கு பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
விஜய் டிவியின் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஆனந்தி இந்த முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவரை அணுகி இது குறித்து கேட்ட போது ”அப்படிச் சில செய்திகள் சமூக வலைதளங்கள்ல வேகமா பரவிட்டிருக்கு. ஆனா, இப்போ வரை நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கல. அப்படி ஏதும் அப்டேட் இருந்தா நானே கண்டிப்பா சொல்றேன்” என்று கூறினார்.
நடிகை சரண்யா மறுப்பு:
அடுத்ததாக சித்ராவின் நெருங்கிய தோழியும் “நெஞ்சம் மறப்பதில்லை” தொடரின் நாயகியான சரண்யா முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரிடம் கேட்ட போது ” “நான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. சித்ரா தன்னுடைய நடிப்புத் திறமையால் முல்லை கதாபாத்திரத்துக்கு முழு உருவம் கொடுத்துள்ளார். முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவின் இடத்தை யாராலும் முழுமையாக நிரப்ப முடியாது” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக சித்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட பல வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டார்.
தமிழகத்தில் 10 மடங்காக உயர்ந்த ‘நிமோனியா பரவல்’ – அதிர்ச்சி ரிப்போர்ட்!!
இதை தொடர்ந்து “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஹேமாவிடம் தகவல் கேட்ட போது அவர் ” முல்லை கதாப்பாத்திரம் தொடர்பாக எந்த தகவலும் உறுதியாகவில்லை, தான் இப்போது தான் அதிக நாட்கள் கழித்து நடிக்க வந்திருப்பதால் எதை பற்றியும் தனக்கு சரியாக தெரியவில்லை என்றும், சீரியல் குறித்த அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளிவரும்” என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்று ரசிகர்களிடத்தில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.