உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த சூப்பர் ஹிட்டான நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். அடுத்தடுத்த படங்களில் இவர் நடித்தாலும் ரசிகர்களிடையே அந்த அளவுக்கு ரீச் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் சிம்பு நடித்த அலை என்ற படத்தின் அம்மா கதாபாத்திரம் நடிக்க ஆரம்பித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்போது இருந்து இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். ஆனால் ஒரே ஒரு நடிகருடன் மட்டும் இன்னும் அம்மாவாக நடிக்காமல் இருக்கிறார் அது வேற யாரும் இல்லை தளபதி விஜய் தான். அவருடன் சேர்ந்து சிவகாசி படத்தில் அன்னியாராக நடித்திருப்பார்.
ஆனால் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை. இப்படி இருக்க சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமாக சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதாவது, நான் சினிமாவை விட்டு விலகி இருந்த போது, சிம்புவுக்கு அம்மாவாக அலை என்ற படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
RRR பட நடிகர் திடீர் மரணம்.., இரங்கல் தெரிவித்த இயக்குனர் ராஜமௌலி!!
ஆனால் அம்மாவாக நடித்தால் அடுத்து என்னோட சினிமா கேரியரில் என்ன நடக்கும்னு தெரியாது. இருந்தாலும் அதையெல்லாம் இப்பொழுது வரை நான் யோசித்தது இல்லை. அதனால அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். சிம்பு தான் என்னுடைய முதல் மகன் என்று கூறியுள்ளார்.