‘வழக்கத்துக்கு மாறா அவ போன் பேசிட்டே இருந்தா’ – சித்ராவை பற்றி மனம் திறக்கும் சரண்யா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சித்ராவின் இறப்பு அனைவரையுமே மிகவும் பாதித்துள்ளது. அவர் இப்படி தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம்?? இந்நிலையில் அவரது நெருங்கிய தோழியும், சீரியல் நடிகையுமான சரண்யா இதனை பற்றி கூறியுள்ளார்.

சித்ராவின் மரணம்:

சின்னத்திரை நடிகையான சித்ரா தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து  கொண்டதை யாராலும் இதுவரையிலும் நம்ப முடியவில்லை. இதுவரையிலும் அவரிடம் பழகியவர்கள் எல்லாருமே அவர் மிகவும் தைரியமான பெண் என்று தான் கூறியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த பிரபலத்தை அடைவதற்காக 8 வருடமாக தனி ஆளாக போராடியவருக்கு அதை விடவா ஒரு மனஅழுத்தம் ஏற்பட்டு விடும் என்றும் கூறி வருகின்றனர். அவரது தாயாருமே தன் மகள் இந்த அளவிற்கு கோழை கிடையாது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அவரது அம்மாவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

உனக்கு கல்யாணம் பண்ண வேற ஆம்பளயே கிடைக்கலயா?? வெண்பாவின் முகத்திரையை கிழிக்கும் அகிலன்!!

இந்நிலையில் அவரது தோழியும் நடிகையுமான சரண்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சித்ரா முந்தைய நாள் வரை அவருடன் தான் இருந்திருக்கிறார். எப்பொழுதுமே போட்டோ, வீடியோ எடுத்துக்கொண்டு கலகலப்பாக இருக்கும் சித்ரா இன்று போன் பேசிகொண்டே இருந்துள்ளார். இதனால் சரண்யா வீடியோ எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

vijay tv

அந்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவை தான் ரீபோஸ்ட் செய்துள்ளார் சித்ரா. இது வரையிலும் சித்ரா இப்படி ரீபோஸ்ட் செய்ததே கிடையாதாம். மேலும் இவ்வளவு தூரம் பழகியும் நிச்சயம் பற்றிய எதையுமே யாரிடமும் சொல்லவில்லை சித்ரா. இன்ஸ்டாவில் போட்டோ பார்த்து தான் தெரிந்துகொண்டுள்ளனர்.

chithra
chithra

அதே போல தான் அவர்களுக்கு பதிவு திருமணம் ஆனதும் யாருக்குமே தெரியாது. இந்நிலையில் அந்த கடைசி நாளில் கூட பேச்சிலர் பார்ட்டி பற்றி தான் பேசியுள்ளனர். காலையில் டிவியில் இருந்து தான் சித்ரா இறந்ததாக செய்திகளை கூறியுள்ளனர். ஆனால் சரண்யா இதனை நம்பவே இல்லையாம். 2 மணிநேரத்திற்கு முன்பு தான் அவளை சந்தித்தேன் என்று கூறி போனை துண்டித்துளார். அடுத்து நியூஸ் பார்த்ததும் தான் அவருக்கே ஷாக் ஆனதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here