விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஹீரோயினின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை சம்யுக்தா. இவர் இந்த சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் விஷ்ணு என்பவரை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு இருவரும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து இவர்கள் தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் மாறி மாறி story மூலம் சண்டை போட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து இவரது கணவர் விஷ்ணு தங்களுக்கு இருக்கும் பிரச்சனை குறித்து அண்மையில் தனியார் சேனல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தா live வில் வந்து தன் கணவரின் தனக்கு செய்த கொடுமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
சேப்பாக்கம் மைதானத்தை பரிசாக பெற்ற தல தோனி…, நெகிழ்ச்சியில் ரசிகர்கள் செய்த சம்பவம்!!
இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு சம்யுக்தாவின் உறவினர் ஒருவருக்கு கால் செய்து ” என்னிடம் சம்யுக்தாவுடைய 4 மணி நேர வீடியோ ஒன்று உள்ளது. இனி என்னை பத்தி ஏதாவது பேசினால் அதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளாராம். இதனால் போலீஸ் ஸ்டேஷனில் விஷ்ணுவின் மீது புகார் கொடுத்ததாகவும், ஆனால் விசாரணைக்கு விஷ்ணு வராததால் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தற்போது live வந்த சம்யுக்தா கூறியுள்ளார்.