கர்ப்பமான விஷயத்தை வெளிப்படுத்திய விஜய் டிவி சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” சீரியல் மூலமாக பிரபலமான நடிகை சமீரா ஷெரிப் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமீரா ஷெரிப்

மக்கள் மத்தியில் சீரியல் மூலமாக பிரபலம் அடைந்து வருபவர்கள் பலர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் பிரபலமாக ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியலின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை சமீரா ஷெரிப். இவர் அந்த சீரியலில் ஷக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அவருடன் அவரது உண்மையான கணவரான அன்வர் ஜான் தான் சீரியலிலும் அவருக்கு கணவராக நடித்திருப்பார்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?? முதல்வர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!!

அதன் பிறகு இவர் தமிழில் பல சீரியல்களில் நடித்திருப்பார். பின், இவர் நடிகர் அன்வர் ஜானை திருமணம் செய்து கொண்டார். இவர் பகல் நிலவு சீரியலில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு “சிறந்த மருமகள்” என்ற விருது கூட கிடைத்தது. பின், இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ரெக்க கட்டி பறக்குது மனசு” என்ற சீரியலிலும் நடித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு பின்பாக இவர் தெலுங்கு சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். சமீப நாட்களுக்கு முன்பாக, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மிஸ்டர் & மிஸர்ஸ். சின்னத்திரை” நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவர் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியினை உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here