நாகசைதன்யாவுடன் விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா.., கண்ணீர் மல்க பேட்டி!!

0
நாகசைதன்யாவுடன் விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா.., கண்ணீர் மல்க பேட்டி!!
நாகசைதன்யாவுடன் விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா.., கண்ணீர் மல்க பேட்டி!!

இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் ‘ஏ மாய சேசாவே’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு தனது திருமண வாழ்க்கையில் தான் 100% உண்மையாக இருந்தாலும் அந்த வாழ்க்கை தனக்கு சரியாக அமையவில்லை, இதனால் சைதன்யாவுடன் தான் கொண்ட திருமண உறவை முறித்துக் கொள்வதாக 2021 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி தனது திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து ஆன இவர் சோர்ந்து போகாமல் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்த வண்ணம் இருக்கிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் தற்போது தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது விவாகரத்து திருமண வாழ்க்கையில் தான் சந்தித்த சில கசப்பான தருணங்கள் மற்றும் தான் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்தும் ஓப்பனாக சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

மின் கம்பங்கள் அறுந்து விழுந்தால் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும்., அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அதாவது நான் விவாகரத்து ஆன நிலையில் மிகவும் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். அப்போது எனக்கு நெருக்கமான சிலர் தான், எனக்கு ஆதரவாக இருந்தனர். மேலும் அவ்வப்போது கடினமான எண்ணங்கள் தோன்றும், ஆனால் தைரியமாக இருப்பதை தவிரவேறு வழியில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். “பொதுவாக நம் வாழ்க்கையில் கஷ்டமான தருணங்கள் வரும் போகும் ஆனால் அவற்றையெல்லாம் நினைத்து கவலைப்பட்டு ஒரே இடத்தில் தேங்கி இருந்து விடக்கூடாது” என தனது ரசிகர்களுக்கு ஒரு பாசிட்டிவான ஸ்பீச்சை கொடுத்து அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here