நடிகை சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை சமந்தா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது படக்குழு இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இருந்து வரும் நிலையில், சம்மு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது அவர் கூறியதாவது, நான் இந்த சினிமாவில் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அதில் கிடைக்கும் வெற்றி தான் எனக்கு வேண்டும். மேலும் சம்பளத்துக்காக நான் நடிக்கவில்லை, அதனால தயாரிப்பாளர்கள் யாரும் சம்பளம் இவ்வளவு தருகிறோம் என்று பேரம் பேச வேண்டாம். அதுமட்டுமின்றி சம்பளத்தை கெஞ்சியும் கேட்க மாட்டேன். மேலும் எனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் கடந்த மூன்று மாதம் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையை அனுபவித்தேன்.
கிறங்கடிக்கும் மேனி.., மெருகேற்றிய ஷைனிங்.., குட்டை பாவாடையில் அட்டகாசம் செய்யும் மாளவிகா!!
சீக்கிரம் இந்த நோயில் இருந்து முழுவதும் குணமடைவேன். மேலும் தற்போது நான் நடித்து வரும் குஷி, சிட்டாடல் படங்களுக்கு பிறகு நான் நடிப்பில் ஓய்வு எடுக்க முடிவெடுத்துள்ளேன். தற்போது எனக்கு ஓய்வு முக்கியம். விரைவில் பழைய மாதிரி நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார். அவர் பேசியது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.