தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழி சினிமாவிலும் வளம் வருபவர் நடிகை சமந்தா.பிரபல நடிகையான இவர் பல நல்ல காரியங்களும் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் தொழில்களும் செய்து வருகிறார்.இப்பொழுது நடிகை சமந்தா புதியதாக ஒரு தொழில் தொடங்க தயாராகியுள்ளாராம் அதற்க்கான பணிகளையும் தொடக்கிவிட்டாராம்.
ஐஸ்வர்யா, கண்ணன் காதலை பற்றி தெரிந்துகொள்ளும் கஸ்தூரி – ஐஸ்வர்யா எடுக்கப்போகும் விபாரீத முடிவு!
புதியதாக தொழில் தொடங்கும் சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாத்துறையில் நல்ல நிலையிலும் முன்னணி நடிகையாவும் நடித்து வருகிறார், இவர் தனது கல்லூரி காலங்களில் மாடலிங்கில் அதிகம் ஆர்வம் காட்டி நல்ல பெயர் பெற்றவர். மாடலிங்கின் மூலம் தனக்கு நடிப்பு திறமை உள்ளது என அறிந்த சமந்தா பட வாய்ப்புகள் பெற்று படங்களில் நடிக்க தொடங்கினார். பொதுவாக பட வாய்ப்பு இல்லையெனில் நடிகைகள் திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் சமந்தா பட வாய்ப்புகள் அதிகம் இருந்தும் தெலுங்குவில் பிரபல நடிகரான நாக சைதன்யவை திருமணம் செய்து கொண்டார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
திருமணத்திற்கு பின்னும் சமந்தா மாறாமல் அதேபோல் இருந்து வருகிறார். படங்களிலும் நடித்து வருகிறார்.வெப் சீரிஸ் போன்றவற்றிலும் கலக்கி வருகிறார்.நடிகை சமந்தா ஒரு சில நல்ல காரியங்களும் பிரத்யுஷா என்று ஒரு NGO ஆரம்பித்து குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு மருத்துவ உதவிகள் போன்றவற்றையும் செய்து வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதல் கட்ட பணிகள் முடிந்தன…
ஹைதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் என்ற பகுதியில் “ஈகம்” என்ற பெயரில் ப்ரீ ஸ்கூல் ஒன்றும் நடத்தி வருகிறார்.“சகி” என்ற பெயரில் பெண்களுக்கான டிசைனர் உடைகள் விற்பனை செய்கிறார்.இதை தொடந்து பெண்கள் அணியும் நகை, அணிகலன்கள் போன்ற புதிய தொழில் ஒன்றை தொடங்க போவதாகவும் அதற்க்கான பணிகள் ஆரம்பித்து முதல கட்ட பணிகள் கூட முடித்துவிட்டாராம்.