நடிகை சமந்தா நோய் வாய்ப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் இந்த நேரத்தில், தன் உடலை வருத்தி முக்கியமான ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார்.
சமந்தா ரிஸ்க் :
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா சமீப காலமாக மயோசிடஸ் என்ற, வினோத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதற்காக எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும், இன்னும் இந்த நோய் தீர்ந்த பாடில்லை. இந்த நோய் காரணமாக சமந்தா தான் கமிட்டாகி இருந்த ப்ராஜெக்டுகளில் இருந்து விலகியதாக தகவல் கிடைத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், இந்த அனைத்து விமர்சனங்களையும், முறியடிக்கும் விதமாக சமீபத்தில் தான் கமிட்டாகி இருந்த சிட்டாடல் இந்தியா என்ற வெப் சீரிஸின் ஷூட்டிங்குக்கு திரும்பினார். இந்த நிலையில், நோயிலிருந்து விடுபடுவதற்காக தன் உடலை வருத்தி, மிகக் கடினமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
உழவன் பவுண்டேசன் நிகழ்ச்சியில் அரசிடம் கோரிக்கை விடுத்த கார்த்திக்.., எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு!!
இது குறித்த வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இது போன்ற தேவையற்ற ரிஸ்குகளை எடுக்க வேண்டாம் எனவும், சாதாரண உடற்பயிற்சிகளை செய்யுங்கள் என்றும் அறிவுரை செய்துள்ளனர். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram