நடிகை சமந்தா சாகுந்தலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த நிலையில், மேடையில் இருந்தபடி அவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெளியான வீடியோ :
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தனது யசோதா படத்திற்கு பின் சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவருக்கு தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டுள்ள நிலையில், அதையும் தாண்டி சாகுந்தலம் படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்று வருகிறார். அந்த வகையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த விழாவுக்கு வெள்ளை நிற சேலை, கண்ணுக்கு பவர் கிளாஸ் என வித்தியாசமான லுக்கில் சமந்தா வந்திருந்தார். படத்தின் இயக்குனர் குணசேகரன் படம் குறித்து பேசும் போது, இதில் உண்மையான ஹீரோ சமந்தா தான் என கூறினார். இதை கேட்டு, உணர்ச்சிவசப்பட்ட சமந்தா மேடையிலேயே கண்கலங்கினார்.
தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., பட ரிலீஸுக்கு விஜய் வர போறாராம்.., எங்கு, எப்போது தெரியுமா?
அதன் பிறகு பேசிய சமந்தா, இந்த படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதை எதிர்பார்த்திருந்தேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. சினிமா மீதான காதலை மட்டும் நான் இன்னும் இழக்கவில்லை என உருக்கமாக பேசியுள்ளார். சமந்தா கண்ணீர் விட்டு அழுத அந்த காட்சி இதோ..
View this post on Instagram