சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் நடிகை சமந்தா, மீண்டும் ஷூட்டிங்குக்கு திரும்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மீண்டும் சமந்தா:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, டாப் நடிகைகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்தார். சமீப காலமாக இவர், மயோசிடஸ் என்ற தசை அலர்ஜி நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நோயின் காரணமாக சமந்தாவால் பழையபடி ஆக்ட்டிவாக இருக்க முடியவில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் படப்பிடிப்பில் பங்கேற்காமல், சிகிச்சை, ஓய்வு என சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதுமட்டுமில்லாமல், இவர் கமிட்டாகி இருந்த முக்கியமான படங்களில் இருந்தும் இவர் வெளியேறியதாகவும் சொல்லப்பட்டது. தற்போது இந்த வதந்திகளை எல்லாம் பொய்யாக்கும் வகையில், நடிகை சமந்தா மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.
கேஜிஎப் வெற்றியை தொடர்ந்து நடிகர் யாஷின் புதிய அவதாரம்.., இத உங்ககிட்ட எதிர் பார்க்கல ராக்கி பாய்!!
அதாவது இதற்கு முன் நடிகர் வருண் தவானுடன் தன் கமிட்டாகி இருந்த, சிட்டாடல் இந்தியா என்ற வெப் சீரிஸில், நடிப்பதற்காக அதன் ஷூட்டிங்குக்கு திரும்பியுள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், உங்க கிட்ட இருந்து இத தான் எதிர்பார்த்தோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.