பிரபல நடிகை சாய் பல்லவி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் நிலையில் தற்போது அவர் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை சாய் பல்லவி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை சாய்பல்லவி குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை சாய்பல்லவி மருத்துவ படிப்பை முடித்த டாக்டர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். இவர் படிக்கும் போது தான் நடிப்பில் வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த பிரேமம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன வாரிசு ப்ரொட்யூசர்.., இணையத்தில் வெளிவந்த மாஸ் அப்டேட்!!
அதன் பின்னர் நடித்து கொண்டே தனது கல்லூரி படிப்பை முடித்தார். இந்நிலையில் தனது மருத்துவ தொழில் எந்த பணியும் செய்யாமல் இருக்கும் சாய் பல்லவி, அதற்காக ஒரு முடிவை எடுத்துள்ளார். அதாவது நடிகை சாய் பல்லவி தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் ஒரு மருத்துவமனையை கட்டி டாக்டர் பணியை தொடங்கும் நோக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால் அவர் சினிமாவை விட்டு விலகுவாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.