
சின்னத்திரையில் கலந்து கொண்டு அதன் பின்னர் பிரேமம் என்கிற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் மாரி, என்.ஜி.கே படங்களில் நடித்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் SK 21 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் சமிபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது காதலனை பற்றி பேசியுள்ளார். அதாவது, சாய் பல்லவி 7வது வகுப்பில் படிக்கும் பொழுது தன்னுடன் கூட படித்த மாணவர் மீது அவர் இனம்புரியதா அன்பு வைத்திருந்தார். அதனை அவரிடம் சொல்ல பயந்த அவர், ஒரு கடிதத்தின் மூலம் தனது அன்பை வெளிக்காட்ட நினைத்தார்.
ஆனால் அதை கொடுக்க முடியாமல் போனதால், அதனை தனது புத்தகத்தில் வைத்து கொண்டாராம். சில நாட்களுக்கு பிறகு அதனை அவரின் தாயார் பார்த்து விட்டு இந்த வயசுலயே உனக்கு கேக்குதா என்று துரத்தி துரத்தி அடித்துள்ளார். அதன் பிறகு அம்மாவிடம் அடிவாங்கும் அழ;அளவுக்கு எந்த செயலையும் செய்ததில்லை என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.