நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்த நடிகை சாய்பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. கடைசியாக இவர் நடித்த கார்கி திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தாலும், வசூலை குவிக்காமல் இருந்தது. இந்த படம் மட்டுமின்றி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எந்த படமும் வசூலை அல்லாமல், தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதால், சாய்பல்லவியை கமிட் செய்ய தயாரிப்பாளர் பயப்படுகிறார்கள்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் சினிமாவில் தள்ளி இருந்து, தனது மருத்துவ தொழிலில் கவனம் செலுத்த தொடங்கினார். சாய் பல்லவி பல விதங்களில் பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இதனை தொடர்ந்து மருத்துவத்தில் கவனம் செலுத்துவதால் சோசியல் மீடியாவில் நீண்ட காலம் வராமல் இருந்தார்.
தளபதியின் LEO பட ப்ரொமோவில் வந்த அந்த காட்சி.., சர்ச்சை கிளப்பிய நெட்டிசன்கள்!!
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது, தனது புன்னகையுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, வாழ்க்கையில் சிரிப்பு, ஆசை, நன்றி உணர்வு இருந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளார்.