ஒடிசா மாநிலத்தில் நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் தான் ருச்சிஸ்மிதா குரு. இவர் ஆல்பம் பாடல்களை பாடுவதும், படத்தில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தனது ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தெரிவிக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவரின் இந்த திடீர் மரணத்திற்கு காரணம் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ருச்சிஸ்மிதாவின் தாயாரிடம் காவல்துறை விசாரணை நடத்திய போது, அவரது தாயார் சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ருச்சிஸ்மிதா தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது தாயிடம் ஆலு பரோட்டா செய்து தருமாறு கேட்டுள்ளார்.
டாப் 10 இடத்தை நழுவ விட்ட பி வி சிந்து…, பேட்மிண்டன் தரவரிசையில் ஏமாற்றம்!!
அதற்கு அவரின் தாய் சற்று தாமதமாகும் என கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதை அறிந்த போலீசார் ருச்சிஸ்மிதா மரணத்திற்கு இது தான் காரணமா இல்ல வேற எதுவும் பிரச்சனை உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.