மல்யுத்த வீரர்களுக்கு நடிகை ரித்திகா சிங் ஆதரவு….,வலுக்கும் போராட்டம்…..,

0
மல்யுத்த வீரர்களுக்கு நடிகை ரித்திகா சிங் ஆதரவு....,வலுக்கும் போராட்டம்.....,
மல்யுத்த வீரர்களுக்கு நடிகை ரித்திகா சிங் ஆதரவு....,வலுக்கும் போராட்டம்.....,

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பா.ஜ.கட்சியைச் சேர்ந்தவருமான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

இப்போது, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர்களை அவமரியாதை செய்யும் விதமாக நடந்து வரும் காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இதற்கிடையில், பாலியல் புகார் தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கோரி தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை நதியில் எறிந்து போடுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற CSK வீரர் ராயுடு…..,ட்விட்டரில் பதிவு….,

இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக நடிகை ரித்திகா சிங் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது, ‘மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை அரசு நடத்தும் விதம் வெட்கம் அளிக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது. அவர்கள் அவமானப்படுவது மனிதம் அற்ற செயலாகும். நமது நாட்டை தோளில் சுமந்து வெளிநாட்டு மண்ணில் பல வெற்றிகளை குவித்த வீரர்களின் பின்னால் நாம் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here