ராதிகாவா வந்த எனக்கு, இப்படி ஒரு அங்கீகாரம் கொடுப்பாங்கன்னு எதிர்பார்கல., உருக்கம் தெரிவித்த ரேஷ்மா!!

0
ராதிகாவா வந்த எனக்கு, இப்படி ஒரு அங்கீகாரம் கொடுப்பாங்கன்னு எதிர்பார்கல., உருக்கம் தெரிவித்த ரேஷ்மா!!

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் கோலிவுட் திரையில் ஒரு சில படங்கள் மற்றும் ஏகப்பட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்கள் என நடித்துள்ளார். ஆனால் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் இவர் நடித்த புஷ்பா கேரக்ட்டர் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரீச்சை பெற்று தந்தது என்றே சொல்லலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு விஜய் டிவி சீரியல்களின் TRB-யில் முன்னிலை காட்டி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடிக்க கமிட்டானார். இதில் இவரது நடிப்பு திறமையால் கவரப்பட்ட ஜீ தமிழின் சீதாராமன் என்ற நியூ சீரியலுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரை கமிட் செய்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இப்படி கெரியரில் ஏறுமுகம் காட்டி வரும் இவர் தற்போது விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 ன் நடுவராக இருந்து வருகிறார். இப்படி தனக்கு ஒரு உயர்ந்த அங்கீகாரம் கொடுத்த அந்த நிகழ்ச்சி இயக்குனருக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய நன்றியினை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்த வாய்ப்பினை பெற்றுக் கொண்ட நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்க எனக்கு செய்த இந்த உதவி எனது கஷ்டமான காலத்தில் என்னை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது என உருக்கமான வார்த்தைகளால் நன்றி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here