தென்னிந்திய சினிமாவில் 80 களில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரேகா. இவர் ‘கடலோர கவிதைகள்’ என்ற படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் ”டீச்சர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். மேலும் இந்நிலையில் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிருந்தார். இதுபோக குக் வித் கோமாளி என்ற ஷோவில் குக்காக கலக்கி வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது தவிர பாரதி கண்ணம்மா சீரியலிலும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்படி இவர் சினிமா கெரியரில் அறிமுகமானது முதல் இன்று வரை ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நேரத்தில் இவர் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது தன் தந்தை மீது அதீத அன்பு கொண்ட இவர் அவர் இறந்த நிலையில் அவருக்கு சமாதி காட்டியுள்ளார்.
பிரபல சீரியலில் குட்டையை குழப்ப என்ட்ரி கொடுக்கும் நியூ என்ட்ரி.., இனி தான் கதையே ஸ்டார்ட்!
இது போதாது என்று தான் இறந்த பிறகு தன் அப்பாவுடன், அவர் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக அவரது சமாதிக்கு பக்கத்தில் தனக்காக மற்றொரு சமாதியை கட்டி பராமரித்து வருகிறார். இப்படி தான் உயிரோடு இருக்கும் போதே தனக்காக சமாதியை ரேகா கட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.