ராஷ்மிகா செய்த அந்த காரியம்.., இனி படங்களில் நடிக்க தடைவிதித்த திரையுலகம்??

0
ராஷ்மிகா செய்த அந்த காரியம்.., இனி படங்களில் நடிக்க தடைவிதித்த திரையுலகம்??
ராஷ்மிகா செய்த அந்த காரியம்.., இனி படங்களில் நடிக்க தடைவிதித்த திரையுலகம்??

நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது அவரை குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது கியூட் எக்ஸ்பிரஸின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு ஜோடியாக இணைந்து நடித்தார். தற்போது இந்தியில் 3 படங்கள் மற்றும் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ எனப் பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, கன்னட திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் நீண்டகாலமாக இருந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரை கன்னடம் திரையுலகம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுக படுத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பாலிவுட் ஊடகம் நடத்திய பேட்டி ஒன்றில் அவர் தனது முதல் கன்னட படமான ‘கிரிக் பார்ட்டி’ படத்தை யார் தயாரித்தது என்றே தெரியாது என்பது போல ராஷ்மிகா கீழ்த்தரமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வெள்ளித்திரை பிரபலம்.., அப்போ இனி கார்த்திக் நிலைமை அதோகதிதான்!!

இந்நிலையில் தற்போது கன்னடத் திரையுலகம் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளது . அதாவது ராஷ்மிகா மந்தனா இனிமேல் கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடிக்கும் படங்களை கன்னடத்தில் ரிலீஸ் செய்யவும் தடை விதிக்க, கர்நாடக தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் முடிவு செய்துள்ளதாக ட்விட்டரில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here