நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அழகு குறித்து பேசியது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அழகு குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மத்தவங்களுக்காக நம்மை Change செய்யணும்னு எந்த அவசியம் இல்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அழகுக்கு எடுத்துக்காட்ட எந்த நபரையும் சொல்ல முடியாது. உலகத்தில் பிறந்த எல்லோரிடமும் ஒரு விதமான அழகு இருக்கத்தான் செய்யும். ஒரு சில நேரங்களில் வீட்டின் கண்ணாடியின் முன் நின்று என்னை பார்த்துக் கொள்வேன். அப்போது நான் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டால் போதுமானது. இப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன்.
மீண்டும் விஜய்யை வறுத்தெடுக்க வந்த மீரா மிதுன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
மேலும் சிலர் குண்டாக இருந்தால் தான் அழகாக இருப்பார்கள். அதனால் யாரேனும் கிண்டல் செய்வார்கள் என்று பயப்படாமல், உங்களுக்கு பிடித்த மாதிரி இருங்கள். அதுமட்டுமின்றி உடற்பயிற்சியின் மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம். சொல்லப்போனால் நான் உடற்பயிற்சியாளரை நியமித்து இருக்கிறேன், அவர் எனக்கு தரும் பயிற்சியின் மூலம் தான் எனது உடல் கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது என்று கூறினார்.