தமிழ் சினிமாவில் ”நாடோடி தென்றல்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ரஞ்சிதா. இதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியிருந்தார். இதன் பிறகு தான் இவர் சாமியார் நித்தியானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி நிலையில் பெரும் சர்ச்சையில் சிக்கி இருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இவரது அப்பா அசோகன் இவர் குறித்து உருக்கமான பேட்டியில் பேசியுள்ளார். அதாவது அதில் அவர் கூறியதாவது , நான் தெலுங்கு திரையில் 25 கும் மேற்பட்ட படங்களில் படங்களில் நடித்துள்ள நான் எனது 3 மகள்களுடன் சென்னைக்கு வந்தேன். இதன் பிறகு சினிமாவில் நடிகையாக உருவாகிய என்னுடைய 2வது மகள் ரஞ்சிதா,அவரது காதல் கணவரை பிரிந்து நித்தியானந்தாவுடன் சேர்ந்து ஆசிரமத்திற்கு சென்றுவிட்டார்.
இது குறித்து நித்யானந்தாவிடம் போய் கேட்டு, அவரிடம் சண்டையும் போட்டுள்ளேன். இப்படி இருக்கையில் எனது முதல் மகள் நிர்மலாவும் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு சென்றுவிட்டார். இப்படி என் 2 மகள்களின் செயல்களை பார்த்து கவலை பட்ட என் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். மேலும் தற்போது எனது 3 வது மகள் ஜோதி தான் என்னை பார்த்து கொள்கிறார் என மனமுடைந்து பேசியுள்ளார்.