நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்துடன் சேர்ந்து நடிப்பது குறித்து பேசியுள்ளார்.
நடிகை ரம்யா நம்பீசன்:
திரையுலகில் தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். இவர் ஆரம்பத்தில் நடித்த எந்த ஒரு மலையாள திரைப்படமும் வரவேற்பு கிடைக்காமல் தமிழ் திரைக்கு திரும்பினார் ரம்யா நம்பீசன். அந்த வகையில் இவர் நடித்த சேதுபதி திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்படத்தில் இடம்பெற்று கொஞ்சி பேசிட வேணாம்.. உன் கண்ணே போதுமடி.. இந்த பாடலை கேட்டாலே போதும்… நிச்சயம் நம் உள்ளத்தில் இவர் தான் வந்து செல்வார். இவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவை கணுவாய் பகுதியில் ஜாய் பாரடைஸ் எனும் புதிய வீட்டு மனைகளுக்கான விற்பனை துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரபல நடிகையும்,பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார்.
இந்த விஷயத்தை கண்டிப்பா Avoid பண்ணிடுங்க.., இதுதான் சீக்ரட், முக்கிய அட்வைஸ் கொடுத்த நயன்தாரா!!
அப்போது பேசிய ரம்யா நம்பீசன், திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் நம்மை விட்டு பிரிந்தது வருத்தத்தை தருகிறது என வேதனை தெரிவித்தார். அதன் பின்னர் வெப் சீரிஸ் தொடரால் பல நடிகர்கள் வேலை கிடக்கிறது என்று கூறினார். அப்போது நீங்கள் விஜய் மற்றும் அஜித்துடன் சேர்ந்து நடிப்பது எப்போது என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரம்யா நம்பீசன் கையை அசைத்து அடுத்த கேள்விக்கு சென்று விட்டார். இப்படி பதில் சொல்லாமல் தவிர்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.