தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா தற்போது முதன்முறையாக தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரம்பாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா?? என்றும் வியந்து வருகின்றனர்.
ரம்யா
தமிழ் திரையுலகில் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான நடிகை என்றால் அது ரம்பா தான். மேலும் மக்கள் மத்தியிலும் இவருக்கு அதிக வரவேற்பு இருந்தது. நடிகர்கள் பலருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் இவரது நடிப்பும், நடனமும் இருக்கும். மேலும் மக்கள் மத்தியில் கனவு கன்னியாகவும் வலம் வந்தார் ரம்பா.
இப்பொழுது மட்டும் ரம்பா நடிக்க வந்திருந்தால் தென்னிந்தியாவையே கையில் வைத்திருந்திருப்பார். அவரை போல திறமை படைத்தவர்கள் இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹை ஹீல்ஸ் போட்டு கூட குத்தாட்டம் ஆட சொன்னால் அசால்டாக ஆடுவாராம்.
இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அடுத்தடுத்து இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது. அதில் தான் பிரச்சனையே ஏற்பட்டது. அதாவது ஆண் குழந்தை இல்லையென்று ரம்பாவை விவாகரத்து செய்ய அந்த குடும்பம் முடிவெடுத்து விட்டது.
ஆனால் ரம்பா எதற்கும் பயப்படாமல் கோர்ட் கேஸ் என்று அலைந்து தற்போது குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். தன் மூத்த குழந்தை பிறந்த நாளுக்கு குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்பா.