தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற பல மொழி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் சரவணன் மீனாட்சி 2 சீரியலில் மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதன் பிறகு ஜீ தமிழில் மிஸ்டர் &மிஸ்ஸஸ் கில்லாடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுபோக ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற பல ஷோக்களுக்கு நடுவராக வந்து கலக்கி இருந்தார். இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் கன்டெஸ்டண்ட்டாக கலந்து கொண்டு அசத்தியிருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதற்கு நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளாகி வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் செவி கொடுக்காத ரக்ஷிதா சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
மாதவிடாய் நேரத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு?? மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி முக்கிய அறிவிப்பு!!!
அந்த வகையில் தற்போது இவர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் புடவை அணிந்து தலையில் மல்லிகை பூ வைத்து கியூட்டாக காட்சியளிக்கிறார். மேலும் அதில் மதுரை மல்லிகைப்பூ, எனக்கு எப்போதும் விருப்பமானது என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பிக்ஸர்களை பார்த்த ரசிகர்கள் ”வட்ட முகத்தில் ஒரு முழு பவுர்ணமியை காட்ட உங்களால் மட்டும் தான் முடியும்” என இவரை வர்ணித்து கமெண்ட் செய்துள்ளனர்.