அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய் சேதுபதி பட நாயகி.. என்ன செய்தார் பாருங்க!!!

0

கொரோனா என்னும் நோய் தொற்று அனைவரையும் பல துயரங்களுக்கு ஆட்படுத்தி உள்ளது. பெரும்பாலானோர் தங்களின் பெற்றோர்கள், உடன் பிறந்தோர்கள், அன்புக்குரியோர் என பல சொந்தங்கள் பந்தங்களை இழந்து வாடுகின்றனர்.இந்நிலையில் அவர்களை ஆட்கொண்ட இன்னொரு வைரஸ் பசி, இந்த வைரஸ் கொரோனாவை விட கொடியது. அந்த வகையில் நடிகை ராஷிகன்னா பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்த வீடியோ தற்போது  வைரல் ஆகிவருகிறது.

கொரோனா வைரசால் மக்களின் இயல்பு நிலை பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. அரசும்  மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. மேலும் அரசுக்கு உதவும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்காற்றி வருகின்றனர்.இவர்களோடு திரைத்துறையினரும் கைகோர்த்துக் கொண்டு உள்ளார்.

சமீபத்தில் நடிகர் ஆரி ,தாடி பாலாஜி உட்பட பல திரைத்துறையினரும் ஏழை எளியோருக்கு உதவியும் உணவளித்தும் வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ராஷி கன்னாவும் கொரோனா பிணி காரணமாக பசி கொடுமையால் வாடும் ஏழை எளியோருக்கு உதவியுள்ளார். நடிகை ராஷிகன்னா ஹிந்தி, தமிழ்,தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அதை தொடர்ந்து பல தமிழ்  படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர்  வேன் ஒன்றில்  உணவு பொட்டலங்களை வைத்து தெருவோர ஏழை எளியோர்க்கு வழங்கி உள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “இதற்காக என்னுடன் பங்களித்த அனைவருக்கும்  நன்றி” என பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here