சன் டிவியில் 3 வருடங்களுக்கு மேல் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்த ‘ரோஜா’ சீரியல் கடந்த மாதங்களில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயின் எப்போது புது சீரியலில் கம் பேக் கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில் ரோஜா சீரியலின் ஹீரோயின் பிரியங்கா நல்காரி தனது புதிய சீரியல் குறித்து இன்ஸ்டா பக்கத்தில் சூசகமாக சின்ன சின்ன அப்டேட் கொடுத்து வந்தார். அதாவது தற்போது இவர் ஜீ தமிழில் ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் சீதாராமன் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அட்ரா சக்க., குக் வித் கோமாளி 4ன் முதல் போட்டியாளர் இந்த இயக்குனரா? லீக்கான முக்கிய அப்டேட்!!
இதில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார். மேலும் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் சாக்சி சிவா நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் இந்த தகவல் அறிந்த இவரின் ரசிகர்கள் இவரை மீண்டும் திரையில் பார்க்க அதிக ஆவலுடன் உள்ளனர்.