திரைத்துறையை பொறுத்தமட்டில் ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு குறிப்பிட்ட கால கட்டம் ஏறுமுகமாக இருந்தாலும், சில நேரங்களில் இறங்கு முகங்களையும் பார்க்க வேண்டிய சூழல் இருக்கும். அது எவ்வளவு பெரிய நடிகர், நடிகைகளாக இருந்தாலும் இந்த ஒரு கட்டத்தை எல்லாரும் தாண்டி தான் வந்திருப்பார்கள். அப்படி, தனது சினிமா கரியரில் கடந்து வந்த மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
தமிழில் வெளியான ‘தமிழன்’ திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி பாலிவுட் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ஹிந்தி சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தனது பங்களிப்பை கொடுத்து வந்த பிரியங்கா அங்கு தனக்கு நேரிட்ட கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன் 2’ வசூலை உயர்த்த லைகா போட்ட பிளான்…,என்ன தெரியுமா?
அதாவது, தனக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க வேண்டிய நிர்பந்தம் வந்ததாகவும், அந்த சூழலில் அப்படிப்பட்ட ஒரு அருவருப்பான படத்தில் நடித்து இன்னும் அதை நினைத்து நொந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் மோசமான வசனங்கள் இடப்பெற்றிருந்ததாம். ஆனால், அந்த குறிப்பிட்ட படம் குறித்தும், அதன் பெயரையும் வெளியிட ப்ரியங்கா விரும்பவில்லை.