நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த லவ் அகெய்ன் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஷாருக்கான் குறித்து பேசியது வைரலாக பரவி வருகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா:
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் தனது கெரியரை தொடங்கிய இவர், தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். தற்போது இவர் நடித்த லவ் அகெய்ன் திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஷாருக்கான் குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, பிரியங்கா சோப்ரா கடந்த 2013ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் டேட்டிங்கில் இருந்தபோது டொரண்டோவில் ரகசிய கல்யாணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
ஆனால் இதனை ஷாருக்கான் மறுத்து பிரியங்கா எப்போதும் என்னுடைய தோழி என்று கூறி இருந்தார். இதுகுறித்து பிரியங்கா சோப்ராவிடம் கேள்வியாக எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘நாங்கள் டேட்டிங்கில் இருந்தது உண்மைதான். ஆனால் கல்யாணம் வரை போகவில்லை’ என்று கூறி முதன் முதலாக ரகசியத்தை உடைத்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் ஷாருக்கான், பிரியங்கா டேட்டிங் செய்வதாக மீடியா கூறியபோது, அதை இருவருமே மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.