எதிர்பாராத ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதில் பாக்கியாவுக்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டரை கெடுக்கும் விதமாக கொடுத்து அவருக்கு ஆங்கிலம் தெரியாது என காரணத்தை காட்டி அந்த வாய்ப்பை தடுக்கிறார் ராதிகா. ஆனால் சுதாரித்துக்கொண்ட பாக்கியா கூடிய விரைவில் ஆங்கிலம் கற்றுக் கொள்வேன் என கூறி, அதற்காக இங்கிலிஷ் கோச்சிங் கிளாஸில் சேர்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த இடைவெளியில் பழனிசாமி என்ற கதாபாத்திரத்தில் நேற்று நடிகர் ரஞ்சித் அறிமுகம் ஆகிறார். கோபியிடம் பாக்கியா விட்ட சவாலில் வெற்றி பெற அவருக்கு ஆதரவாக இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சீரியல் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக வருகிறது.
ராஜா ராணி 2 வில் நியூ என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள்.., சந்தியாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
அதாவது பாக்கியாவின் கேட்டரிங்கை திறந்து வைக்க சீப் கெஸ்ட்டாக ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியா ராமன் வந்திருந்தார்கள். இந்நிலையில் இவர் மீண்டும் எவ்வாறு புது கேரக்டரில் வரமுடியும், ஒருவேளை இந்த சீரியல் குழு இதை மறந்து விட்டார்களா?? இல்லை பாக்கியலட்சுமி சீரியலை இன்னும் சூடு பிடிக்க வைக்க இவரை தொடர்ந்து பிரியா ராமனும் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.