நடிகை பிரியா பவானி சங்கர் நீண்ட கால ஆசை நிறைவேற போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பிரியா பவானி சங்கர்:
விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலம் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் பிரியா பவானி சங்கர். இதைத்தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதித்தார். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது பத்து தல, இந்தியன் 2, அகிலன், டிமாண்டி காலனி 2 என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து போட்டி போட்டு நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிசியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மீண்டும் ஒன்று சேர இருக்கும் ரக்ஷிதா-தினேஷ் ஜோடி?? அப்போ 2வது கல்யாணம் Cancel-ஆ??
அந்த வீடியோவில் பிரியா பவானி சங்கரின் நீண்ட கால கனவான ரெஸ்டாரண்டை விரைவில் தொடங்கப் போவதாகவும் மக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அளவுகடந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். சமீபத்தில் பிரியா பவானி சங்கர் சொந்த வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram