நடிகை ப்ரணிதா சுபாஷ் ஆடி அமாவாசையை முன்னிட்டு தன் கணவருக்கு பாத பூஜை செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ப்ரணிதா சுபாஷ்:
நடிகை ப்ரணிதா சுபாஷ் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் நடிகை ப்ரணிதா சுபாஷ் ஆடி அமாவாசையை முன்னிட்டு தன் கணவருக்கு பாத பூஜை செய்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது, நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபட்டு கொண்டிருக்கும் நிலையில் நடிகை ப்ரணிதா சுபாஷ் தன் கணவரை கடவுளாக நினைத்து பாத பூஜை செய்து அதை புகைப்படம் எடுத்து தனது இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்த புகைப்படத்தை சில நெட்டிசன்கள் கிராமத்து பகுதியில் இப்பவும் இந்த முறை உண்டு.. நீங்கள் அதை செய்வது மகிழ்ச்சியை தருகிறது என்று வரவேற்றுள்ளனர். ஆனால் சிலர் மனிதருக்கு இது போன்ற பூஜைகளை தவிர்த்திருக்கலாம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்