தமிழில் ”நாய் சேகர்” படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் தான் பவித்ரா லட்சுமி. இவர் ஓகே காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்து இருந்தார். ஆனால் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் சினிமாவில் இவருக்கென ஒரு தனி இடம் கிடைக்க தொடங்கியது. இதன் விளைவாக இவருக்கு சதீஷுடன் இணைந்து நாய் சேகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து,ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்றுத்தந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து இவர் தற்போது மலையாள திரையிலும் நடிக்க களமிறங்கி இதுவரை 3 படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் தன்னுடைய கடந்த கால வாழ்கை குறித்து தனது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதாவது இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் இவரது தாயர் இவரிடம் நன்றாக படிக்கும் படி கூறிவந்தால், இவரும் படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.
இதன் பிறகு இவருடைய கெரியருக்காக சென்னைக்கு வந்த இடத்தில் எதிர்ப்பாராத விதமாக இவருக்கு சாலையில் விபத்து நடந்துள்ளது. இதனால் இவருடைய முகத்தில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு நடந்த ஆப்ரேஷன் குறித்து தன் அம்மாவிடம் சொல்லாமல் பல நாள் மறைத்துள்ளாராம். இவ்வாறு தனக்கு நடந்த விபத்தை தன் தாயிடம் கூட கூறாமல் தன்னுடைய சினிமா கெரியருக்காக பல நாள் தனியாக கஷ்டப்பட்டுள்ளதாத உருக்கமான வார்த்தைகளால் பவித்ரா கூறியுள்ளார்.