தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தான் பவித்ரா. இவர் தெலுங்கு திரையில் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் அண்ணன் நரேஷ் பாபுவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் பவித்ரா 2 முறை திருமணம் முடித்து விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுபோக நரேஷ் பாபுவுக்கும் இதற்கு முன் 3 முறை திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் 4 வதாக பவித்ராவை திருமணம் முடித்துக் கொண்ட இவர் தனது 3 வது மனைவி ரம்யா ரகுபதியிடம் சட்டப்படி விவாகரத்து வாங்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் நரேஷ் மற்றும் பவித்ரா ரகசியமான திருமண வாழ்க்கை வாழ்ந்து வருவதை குற்றம் சாட்டி ரம்யா விவாகரத்து தர மறுத்து வருகிறார்.
இப்படி இருக்கையில் தான் நரேஷ் , பவித்ரா இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து, வெளிநாட்டுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்த செய்தி கேட்ட பவித்ராவின் முதல் கணவர், இவரை பற்றி முதல் முறையாக பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது பவித்ராவிற்கு ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் குறிக்கோள். இதனால் தான் 1500 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான நரேஷை திருமணம் செய்துள்ளார். மேலும் இதை நரேஷ் கூடிய விரைவில் உணர்வார் என குறிப்பிட்டுள்ளார்.