நயன்தாரா வாழ்க்கையில இது நடந்ததா சொல்றது பொய்.., வதந்திக்கு முற்றுப்புள்ளி!

0
நயன்தாரா வாழ்க்கையில இது நடந்ததா சொல்றது பொய்.., வதந்திக்கு முற்றுப்புள்ளி!
நயன்தாரா வாழ்க்கையில இது நடந்ததா சொல்றது பொய்.., வதந்திக்கு முற்றுப்புள்ளி!

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற புகழோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. ஐயா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை வந்தார். இதன் பின் காதல் வலையில் விழுந்து சில சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதன் பிறகு தனது கெரியரில் கவனம் செலுத்த தொடங்கிய இவர், தனித்துவமான கதைகளில் நடித்து வந்த இவர் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் காதலர் விக்னேஷின் கரம் பிடித்த இவர் தற்போது 2 ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். தற்போது இவர் அட்லியின் இயக்கத்தில் ஜவான் திரைப்படத்திலும், இன்னும் ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை லாபம் தரக்கூடிய சில துறைகளில் தொடர்ந்து நயன் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வட சென்னையில் உள்ள அகஸ்தியா தியேட்டரை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

ச்சீ.., நீ எல்லாம் ஒரு மனுஷியா.., ஐஸ்வர்யாவை இழிவுபடுத்தும் முல்லை.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

மேலும் அந்த தியேட்டரை இடித்துவிட்டு அந்த இடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மல்டிபிளக்ஸ் திரையரங்கை கட்ட முடிவெடுத்திருப்பதாக தெரியவந்தது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது, அகஸ்தியா திரையரங்கம் இருக்கும் இடம் அகஸ்தியா அறக்கட்டளைக்கு சொந்தமானது என்பதால் இதை யாராலும் விற்க முடியாது. மேலும் இதை நயன்தாரா வாங்கிவிட்டார் என்று பரவும் செய்தியை உண்மை இல்லை என திரையரங்க நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here