கோலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்த கனெக்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரின் ரீல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமைந்த நிலையில், ரியல் வாழ்க்கையில் மட்டும் அவ்வப்போது சறுக்கல் ஏற்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது இவர் சினிமாவில் நுழைந்த போது சிம்பு மற்றும் பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அந்த காதல் சர்ச்சையில் இருந்து தப்பித்து வந்த நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டு இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
தற்போது சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வரும் நயன்தாராவை குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது திருமணத்திற்கு முன்பு நயன்தாரா நடிகர் ஆர்யாவுடன் மூன்று வருடங்களாக லிவிங் டுகெதரில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஆர்யா சொல் பேச்சை கேட்டு தான் நயன்தாரா நடந்ததாக கூறப்படுகிறது.
ஜனனி வெளியே போக காரணமே நீங்க தான்., அமுதவாணனை ஆதாரத்துடன் சிக்க வைத்த அசீம்!!
அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட சில முரண்பாடு காரணமாக அவர்கள் பிரிந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இரண்டு பேரும் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ராஜா ராணி என்ற படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்யாவும் நடிகை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதியர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.