சமீபத்தில் நடந்த கல்லூரி விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மாணவர்களுக்கு அட்வைஸ் செய்தது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை நயன்தாரா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்த கனெக்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியது. தற்போது அட்லீ, ஷாருக்கானை வைத்து இயக்கும் ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இந்த ஆண்டில் ஜவான் திரைப்படம் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் முதன் முதலாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அப்போது மாணவர்களுக்கு சில அறிவுரைகளை கூறினார்.
படவாய்ப்பு இல்லாமல் இப்படி இறங்கிடீங்களா ரம்யா.., மேடையில் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்!!
அவர் பேசியதாவது, கல்லூரியில் படிக்கும் பொழுது நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் உங்களின் வாழ்க்கையை மாற்றக்கூடியவை என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். மேலும் நீங்கள் படித்து முடித்த பிறகு மிகப்பெரிய உயரத்தை அடைந்த போதும் பணிவுடன் இருங்கள். அதுமட்டுமின்றி நீங்கள் யாரோடு பழகுறீர்கள் என்பது முக்கியம் என்று மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார் லேடி சூப்பர் ஸ்டார்.