தனது முதல் போட்டோஷூட்டை பகிர்ந்த நதியா – அப்பவே அவ்ளோ அழகு!!

0

தமிழில் அந்த காலத்தில் முன்னணி நடிகையாக இருந்து திரையுலகையே கலக்கி வந்தவர் நதியா. அந்த காலங்களில் எல்லாம் நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில் காலண்டரிலும் முன்னணி நடிகைகளின் புகைப்படம் தான் இருக்கும். அந்த வகையில் தனது பழைய நினைவாக காலண்டர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நதியா

அந்த காலத்தில் எல்லாம் நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் கதைகள் யாவும் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் தனது நடிப்பு திறனையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பர். அந்த வகையில் ஒருவர் தான் நதியா. ஆரம்ப காலத்தில் இவர் மலையாள படங்களில் தான் முதலில் நடித்திருந்தார். அதன் பிறகே இவர் தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் குறும்பு பெண்ணாக நடித்திருப்பார். இந்த படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவற்றின் ஸ்டைலும் மக்களுக்கு பிடித்து போனதால் நதியா கம்மல். நதியா வளையல், நதியா டிரஸ் என ட்ரெண்ட் ஆனது. உச்சக்கட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த வேளையில் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

அரைகுறை ஆடையுடன் முன்னழகை காட்டிய அனிகா!!

ஆனாலும் அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயா டிவியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு எம். குமரன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் பிரபாஸ்க்கு அம்மாவாக நடித்த மிர்ச்சி திரைப்படம் டாப் ஹிட் அடித்தது.

தற்போது வரை இளமை மாறாமல் அப்படியே இருக்கும் நதியாவை பார்த்து அனைவரும் வியக்க தான் ஸ் செய்கின்றனர். அந்த காலத்தில் எல்லாம் காலண்டரில் பிரபல நடிகைகளின் புகைப்படம் தான் இருக்கும். அந்த வகையில் தனது நினைவுகளை பகிரும் விதத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நதியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here