நடிகை மீனாவின் இரண்டாம் திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவரே மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை மீனா:
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து பின்னர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் நடிகர் ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதன் பின்னர் அவருடைய மார்க்கெட் குறைந்ததால் கடந்த 2019ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. அக்குழந்தை விஜயின் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்த மீனாவுக்கு, அவரின் தோழிகள் அனைவரும் பக்கபலமாக இருந்தனர். தற்போது மீனா தனுஷை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில் நடிகை மீனாவே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது அவர் பேசியதாவது, என்னுடைய கணவர் இறந்து விட்டார் என்பதை தற்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. அப்புறம் எப்படி நான் 2வது திருமணம் பற்றி யோசிப்பேன். என்னைக் குறித்து வெளியே வரும் செய்திகள் வேடிக்கையாக இருக்கிறது. இப்போதைக்கு நல்ல படங்கள் வந்தால் நடிப்பேன்.மேலும் என் மகளுக்கு நல்ல ஒரு ஏதிர்காலத்தை அமைத்து தருவதில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.