நடிகை மீனாவின் கணவர் கடந்த ஆண்டு இறந்து நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை மீனா:
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. தற்போது அம்மா கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த மீனா கடந்த 2009ம் ஆண்டு வித்தியசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பியதற்கு நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
நைனிகா விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார். இப்படி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த மீனாவுக்கு கடந்த வருடம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சோகம் அரங்கேறியது. தன்னுடைய ஆசை கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அப்படி போடு.., உலகநாயகனுடன் இணையும் சிவகார்த்திகேயன்.., ஷூட்டிங் எப்போது? படக்குழுவினர் அறிவிப்பு!!!
அவர் பேசியதாவது, எனக்கு ஹிருத்திக் ரோஷனை ரொம்ப பிடிக்கும். அவரை போல தான் மாப்பிளை வேண்டும் என்று என் அம்மாவிடம் திருமணத்திற்கு முன்பு கூறினேன். அவர் அற்புதமாக நடிப்பார், நடனமாடுவார் என்று கூறினார். அப்படி தொடர்ந்து பேசிய அவர், எனக்கு இரண்டாவது திருமணம் குறித்து ஒரு வதந்தி சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அது உண்மை இல்லை என்று நான் முன்பே அறிவித்திருந்தேன் என்று கூறினார்.