சினித்துறையை பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாளும் புது முக கலைஞர்கள் வந்த மையமாக இருந்தாலும், அதில் ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பது சிலர் மட்டுமே. அப்படி ஒரு வேலை ட்ரெண்ட் ஆகி ரசிகர்கள் குவிந்தாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்வது என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. அதுவும் 80-90ல் ஹிட் அடித்த குழந்தை நட்சத்திரங்கள் எல்லாரும் இன்று வரை சினித்துறையில் டாப்பில் உள்ளார்களா? அப்டிங்குறது மிகப்பெரிய கேள்வி குறிதான்.
அப்படி அதிர்ஷ்டம் கொண்டு இன்று முன்னணி நடிகையாக இருப்பதில் ஒருவர் தான் நடிகை மீனா. இவர் சூப்பர் ஸ்டார் படத்தில் ‘ரஜினி அங்கிள்’ அப்டினு கூப்பிடுற குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘தில்லானா..தில்லானா..நான் தித்திக்கின்ற தேனா’ என அதே ரஜினியுடன் ஜோடியாகவும் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து பல நடிகர்களுடன் நடித்து ஹிட் கொடுத்து வந்தவர் கடந்த 2009ல் வித்யா சாகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்கிற மகளும் உள்ளார். அம்மா மீனாவை போலவே நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் அறிமுகமாகி ரீச் அடைந்தார். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத விதமாக மீனாவின் கணவர் வித்யா சாகர் உயிரிழந்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா தற்போது உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளார்.
அதாவது, நடிகை மீனா 32 வருடம் திரையுலகில் நடிகையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை மீனா ஒரு நாளும் உணர்ந்ததே இல்லையாம். அப்படி இருக்கப்போ அவர் அன்பு கணவர் வித்யா சாகர் தான் அதை சொன்னதேவாம். மீனாவை எந்த அளவுக்கு காதலித்திருந்தால் இப்படி அவரை கவனித்து சொல்லியிருப்பார்.