தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். என்னதான் இவர் மலையாள திரையில் நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் கோலிவுட் சினிமா தான் இவரது மார்க்கெட்டை தூக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து தற்போது இவர் தெலுங்கு திரையிலும் களமிறங்கி வெற்றி வாகை சூடி வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இவர் உதயநிதி, பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ”மாமன்னன்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்த நிலையில் வரும் ஜூன் 23 ஆம் தேதியில் திரைக்கு வர உள்ளது. மேலும் நேற்று இதன் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
தமிழக பள்ளி திறப்பில் மாணவர்களுக்காக சிறப்பு செய்தி …, அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இதில் கலந்து கொண்டு பேசிய கீர்த்தி, இந்த படத்தில் தான் ஒரு கம்யூனிஸ்ட் வாதியாக நடித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் இப்படம் முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்துடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதாக கூறியுள்ளார். அப்போது இவரிடம் இவரது திருமணம் குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் ”ஏங்க என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கிறதுலயே இருக்கீங்க”, அப்படி கல்யாணம் நடக்கிறப்போ நானே சொல்கிறேன் என கூறியுள்ளார்.