தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார். ஆர்மபித்தில் இவர் ராக் ஸ்டார் அனிருத்தை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என்று நாளைடைவில் தெரிந்தது. அதன் பின்னர் அவர் தனது நீண்ட கால நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
அதுமட்டுமின்றி ஒருவருடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படமும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது காதல் குறித்து முதன் முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, ஹா ஹா போட்டோவில் இருப்பவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.
தடபுடலாய் தயாரான சமந்தாவின் 2வது திருமணம்., யார் மாப்பிள்ளை தெரியுமா??
அவர் என்னுடைய வருங்கால கணவர் கிடையாது என்றும் அப்படி என்னுடைய வாழ்க்கை துணையை நான் தேர்ந்தெடுத்து விட்டேன் என்றால் கண்டிப்பாக தகவலை வெளியிடுவேன், அதுவரை பொறுமையாக இருங்கள்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.