ஒடிசாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகி உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு கொண்டு வர தமிழக முதல்வர் முக ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் பிரதமர் மோடி வருகை தந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அந்த பகுதிகளை பார்வையிட முடியவில்லை என்று, ஒடிசா முதல்வரை மட்டும் சந்தித்து தமிழகம் திரும்பியதாக உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
நீட் தேர்வு மாணவர்களே., ரிசல்ட் எப்போன்னு தெரியுமா? தயாராகிக்கங்க!!!
இந்நிலையில் உதயநிதியை குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, உதயநிதி ஸ்டாலின் இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். மேலும் ரயில் விபத்து மீட்புப் பணிகள் குறித்து ஒட்ட முடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.