சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கனிகா, தனது வாழ்க்கையில் நடந்த எமோஷ்னல் மொமெண்ட் குறித்து தற்போது பதிவிட்டுள்ளார்.
நடிகை கனிகா:
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த 5 ஸ்டார் திரைப்படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கனிகா. இந்த படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம்,கன்னடம் , தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் சில காலங்கள் மட்டுமே படங்களில் நடித்த கனிகா, கடந்த 2008ம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு , குடும்பத்தை பார்த்து கொள்வதில் பிசியாகி விட்டார். இவருக்கு மகன் ஒருவர் உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் திருமணத்திற்கு பிறகு மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த கனிகா. பிறகு தமிழில் விஜய்சேதுபதியுடன் மாமனிதன் படத்திலும் மற்றும் சமீபத்தில் வெளியான கோப்ரா படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கோலங்கள் சீரியலை தொடர்ந்து இயக்குனர் திருசெல்வத்தின் மற்றொரு படைப்பாக சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில், நடிகை கனிகா முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
நடிகர் சங்கம் எதுக்கு இருக்கு? இவ்ளோ நடந்தும் கண்டுக்கல – முன்னணி பிரபலங்களுக்கு குவியும் கண்டனம்!!
இந்நிலையில் நடிகை கனிகா தனது வாழ்க்கையில் நடந்த எமோஷ்னல் மொமெண்ட் குறித்து பேசியுள்ளார். அப்போது, அவர் ரொம்பவும் பீல் பண்ணி கூறியது, தன் மகன் இருதய பிரச்சனையுடன் பிறந்ததாகவும், ICU வில் வைத்திருந்த தான் குழந்தையை பார்த்து மனம் நொறுங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் குழந்தை 7 மணி நேரம் ஆபரேஷனுக்கு பின் பிழைத்ததாகவும், மேலும் பெரிய ஆபத்திலிருந்து தான் மகன் தப்பித்து வந்ததால் இன்று வரை அவரை பாதுகாப்பாக பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.